(புதியவன்)
ஆசிய பசிபிக் பகுதியைச் சேர்ந்த இளம் தலைமுறை இளைஞர்களில் ஏறத்தாழ 64 வீதமானோர் இவ்வாண்டில் சுற்றுப்பயணத்திற்கு அதிகம் செலவிடத் தயாராக இருப்பதாக ‘குளூக்’ எனும் சுற்றுலாவி முன்பதிவு நிறுவனம் நடத்திய அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இளம் தலைமுறை இளைஞர்களில் பலர் தங்களது வருமானத்தில் பாதியை சுற்றுப்பயணத்திற்கு செலவிட தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
80 வீதமானோர் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பரிந்துரைகள், விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுலாப் பயணங்களை தீர்மானிப்பதாகவும் , இன்னும் சிலர் சாகசங்கள் அடங்கிய பயணங்களை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இவ்வாறான பயணங்களை மேற்கொள்ள இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுகின்றனர்.
கொவிட் தொற்று பரவலின் பின்புலத்திலேயே இவ்வாறாக சாகச மற்றும் சுற்றுலாவி பயணங்களில் அதிகளவில் ஈடுப்படுகின்றனர்.
இதேவேளை, 1981 முதல் 1996க்கு இடைப்பட்ட வருடத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கை துணையுடனும், இளைய தலைமுறையினரான 1997 முதல் 2012க்குள் பிறந்தவர்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் சுற்றுலாவி செல்ல விரும்புவதாகவும் அந்த ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது.
சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம், தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 2,600 பேர் பங்கேற்ற இந்த ஆய்வின்மூலம், 65 வீதமானோர் நீண்ட பயணங்களைவிட, அடிக்கடி மேற்கொள்ளும் குறுகிய பயணங்களை அதிகம் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.