எழிலன்
64 சக்தி பீடங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மண்டலாபிசேக நிறைவு உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் மற்றும் ஏனைய பாரிவார மூர்த்தங்களுக்கு விசேட அபிசேக ஆராதணைகள் இடம்பெற்று உள் வீதியூடாக சிம்ம வாகனத்தில் வீற்று அம்பிகை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு மண்டலாபிசேக உற்சவ அருட்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர்.
மண்டலாபிசேக கிரியைகளை சிவஸ்ரீ ப.மு.பால குமாரகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்
20.01.2024 அன்று 09.38 மணிமுதல் 11.20 மணிவரையான சுப வேளையில், 33 குண்டபக்ஷ மகா யாக பிரதிஷ்டா மகா கும்பாபிசேகம் சிறப்பாக இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.