இன்பன்.
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஈழமணித்திருநாட்டின் வடபால் கீரிமலையிலே அமர்ந்து அருள்பாலித்துவரும் நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் சனிக்கிழமை(24) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
அதேவேளை எதிர்வரும் 07ஆம் திகதி வியாழக்கிழமை இரவு சப்பறத்திருவிழாவும் மறுநாள் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்த்கக்கது.
பூஜை நேர விபரங்களாக
ஸ்தம்பித பூஜை -காலை 8.00 மணிக்கும் வசந்த மண்டப பூஜை -காலை 8.30 மணிக்கும் தேருக்கு ஆரோகணம் காலை 10.00 மணிக்கும் தேரலிருந்து அவரோகணம்- மாலை 3.00 மணிக்கும் தொடர்ந்து பிராய்ச்சித்த அபிஷேகம் இடம்பெறும் என குறிப்பிடப்படுகிறது.
இரவு சிவராத்திரி சிறப்பு பூசைகளுடன் ஆன்மீகம் சார் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.(ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.