(புதியவன்)
எட்டு வருடங்களாக குவைத்தில் வசித்து வரும் லக்ஷ்மன் திலகரத்ன என்ற 44 வயதுடைய இலங்கையர் ஒருவர் குவைத்தில் கடந்த ஜனவரி 10ஆம் திகதி உணவு விநியோக சாரதியாக பணிபுரிந்து கொண்டிருந்த போது இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.
ஓடர் செய்யப்பட்ட உணவை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் இவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர் தவறான இருப்பிடத் தகவலை வழங்கியதாகவும், இதனால் ஆரம்பத்தில் தவறான முகவரிக்குச் சென்றதாவும் திலகரத்ன தெரிவித்தார்.
இவ்வாறாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான திலகரத்ன, தனக்குத் தெரிந்த ஒருவரின் உதவியுடன் மகிழூந்தில் மருத்துவமனைக்குச் சென்றார். அவர் இப்போது தாக்குதலுக்கு நியாயம் கேட்பதோடு இலங்கைக்கு திரும்ப உதவுமாறும் கேட்டு நிற்கிறார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.