(புதியவன்)
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான மேற்கு பப்புவாவில் ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரான்சிகி நகருக்கு கிழக்கே 41 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.