இனியபாரதி.
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் அனுமதி வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை(18) இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வீட்டுத்திட்டம், காணி விடுவிப்பு, குடி நீர் வழங்கல், வீதி அமைப்பு மற்றும் புனரமைப்பு, விவசாய நலன்கள், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
குறித்த கூட்டத்தில் யாழ். மாவட்ட பதில் மாவட்ட செயலர் பிரதீபன், மேலதிக மாவட்ட செயலர் ஸ்ரீமோகன் மற்றும் பிரதேச செயலர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், துறைசார் அரச நிறுவனங்களிம் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.