இலங்கைக்கு மேலும் ஒரு உறுதி​யை வழங்கிய ஐ.எம்.எப் 
இலங்கைக்கு மேலும் ஒரு உறுதி​யை வழங்கிய ஐ.எம்.எப் 

(புதியவன்)

சர்வதேச இறையாண்மை பிணைமுறி பத்திரம் வைத்திருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இலங்கையால் திருப்பிச் செலுத்தப்படாத  சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச பிணை முறி பத்திரங்களை மறுசீரமைக்க மே மாதத்தின் நடுப்பகுதிக்குள் முதலீட்டாளர்களுடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொள்ளும் என Bloomberg இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Standard Chartered Strategic information மேற்கோள் காட்டி, Bloomberg இணையத்தளம் இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சமீபத்திய தரவுகளை தெரிவித்திருந்தது.

இலங்கையால் திருப்பி செலுத்தப்படாத 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சர்வதேச பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைக்க மே மாத நடுப்பகுதியில் இலங்கை, முதலீட்டாளர்களுடன் உடன்படிக்கையை எட்டிவிடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சர்வதேச இறையாண்மை பிணைமுறி பத்திர உரிமையாளர்களின் பிரதிநிதிகள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் அடுத்த சில வாரங்களில் இலங்கை மீண்டும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என Bloomberg இணையத்தளம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட "மேக்ரோ-இணைக்கப்பட்ட பிணைப்புகள்" தொடர்பில் சர்வதேச பிணைப்புதாரர்களுடன் இலங்கையால் உடன்படிக்கைக்கு வரமுடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்தகால மாநாட்டுடன் இணைந்து நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதியமைச்சர் புஜி டெய்ஜோ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

அந்த சந்திப்பில், கடன் மறுசீரமைப்பு செயல்முறையை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர ஜப்பானின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய பிரதி நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், உலக வங்கியின் தனியார் துறைக்கு சேவைகளை வழங்கும் அமைப்பான சர்வதேச அறக்கட்டளையின் பிராந்திய துணைத் தலைவர் ரிக்கார்டோ புலிட்டுடனும் நிதி இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அரச வர்த்தக மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் நிதித்துறையின் ஸ்திரத்தன்மைக்கு அதிக முதலீடுகளை மேற்கொள்ள சர்வதேச நாணய நிதியம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(ஏ) 

51 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.