எழிலன்
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காயநகர் கிராம சேவையாளர் பிரிவு ஈச்சளவக்கை கிராமத்தின் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், பொலிஸ்மா அதிபரின் சிந்தனைக்கு அமைய ஈச்சளவக்கை கிராமத்தின் மருதம் விளையாட்டுக் கழகம், அதிரடியான முடிவை எடுத்து கழகத்தின் ஆறு பேர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் குளத்தின் வாய்க்கால் பகுதியில் இறங்கித் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது, கசிப்பு உற்பத்தியாளர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். கசிப்பு பரல் இரவாகியும் அவ்விடத்திலிருந்த நிலையில், குறித்த குழுவினரால் மீட்கப்பட்ட சட்டவிரோத மதுபானங்கள் அடம்பன் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும், அவ்விடத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் இருவர் தாம் சட்டவிரோத மது உற்பத்தியை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிடிக்க முடிந்தால் பிடித்துப் பார்க்கட்டும், பிடித்துக் கொடுத்தவர்களுக்குத் தாக்குவதாகவும் எச்சரித்தனர்.
உடனே அவர்கள் அடம்பன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமையால், இளைஞர்கள், சிறுவர்கள், பாடசாலை செல்லாது கசிப்பு மாபியாக்களுக்கு அடிமையாகவுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.