(ஆதவன்)
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றுக்காகக் கொண்டுசெல்லப் பட்ட இரண்டு கைதிகள் நேற்றுச் செவ் வாய்க்கிழமை அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அவர்கள் 30 நிமிடங்களுக் குள் பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
திருட்டுச் சம்பவமொன்றில் ஒரு வருட சிறைத் தண்டனை பெற்ற கைதியும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு கைதியும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் அவர்களுக்கிருந்த பிறிதொரு வழக்குக்காகக் கொண்டு செல்லப்பட்டபோதே தப்பியோடினார்கள்.
விரைந்து செயற்பட்ட சாவகச்சேரிப் பொலிஸார் 30 நிமிடங்களுக்குள் கைதிகளை மீண்டும் கைது செய்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
தப்பியோடிய குற்றத்திற்காக குறித்த இரு கைதிகளுக்கும் தலா ஆறு மாத சாதாரண சிறைத் தண்டனையும் தலா ஆயி ரத்து 500 ரூபா தண்டப்பணமும் விதித்து நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார்.
தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக மேலும் ஒரு மாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிவான் மேலும் உத்தரவிட்டார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.