(ஆதவன்)
கொழும்பு தேசிய மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உலர் உணவுப் பொருள்கள் தரமற்றவையாக உள்ளன என்று மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
நோயாளிகளின் உணவுக்காக வழங்கப்படும் மரக்கறிகள் சில அழுகிக் காணப்படுகின்றன. அத்துடன் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேநீரைத் தயாரிப்பதற்கு காலாவதியான பால்மா மற்றும் சீனி பயன்படுத்தப்படுகிறது.
சில சமயங்களில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் தொழிலாளர்களின் உணவுக்கு தகுதியற்ற மீன்களைக் கொண்டு உணவு தயாரிக்கின்றது என்றும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு பல தடவை தெரியப்படுத்திய போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.