ஐ.ம.ச. கோரிக்கை
(ஆதவன்)
ஈரானுடன் இலங்கை அரசாங்கம் தனது உறவை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எவ்வித உள்நோக்கமும் இன்றி, இலங்கை யின் வளங்களைக் குறிவைக்காமல் இலங் கைக்கு உதவிகளை வழங்கிவரும் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுடன் அரசு உறவை வலுப்படுத்தவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
"அரபுலகுடன் இலங்கை கடந்த காலங்களில் சிறந்த நட்புறவைப் பேணியது. இலங்கையின் அபிவிருத்திக்கு அரபுலகம் உதவிகளை வழங்கியது. வட்டி இல்லாத கடன்கூட வழங்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் பல இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். இந் நிலையில் ஈரான் அரச தலைவர் இலங்கை வரு வது நல்லது. எவ்வித உள்நோக்கமும் இன்றி உதவிகளை வழங்கும் இவ்வாறான நாடுகளு டன் உறவை வலுப்படுத்துவது எமது நாட்டின் பொருளாதாரத்துக்குப் பலமாக அமையும்” என்று முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.