மாதவன்.
மருத மடு அன்னையின் திருச் சொருபம் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில்!
மருதமடு அன்னையின் திருச்சொருப பவனி நெல்லியடி ஊடாக கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று(17) மாலை வருகைதந்து அங்கு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை(18) காலை அங்கிருந்து புறப்பட்ட மருதமடு மாதா திருச்சொருப பவனி காலை 8மணியளவில் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்துக்கு வருகைதந்து அங்கு சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்று வருகின்றன.
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.