புதியவன்.
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் 3, 646 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான குடும்பங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 487 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கேகாலையில் 2 ஆயிரத்து 813 பேரும் கிளிநொச்சியில் 949 பேரும், பதுளையில் 190 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.