விமல் வீரவன்ஸ ஆரூடம்
ஆதவன்.
சர்வதேச நாணய நிதியமும், அமெரிக்கத் தூதரகமும்தான் இந்த நாட்டை ஆள்கின்றன. எனவே, ஈரான் அரசதலைவரின் இலங்கைக்கான பயணம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட வாய்ப்புண்டு என்று நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
உமாஓயா' பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்வதற்கு ஈரான் அரசதலைவர் இலங்கை வரவுள்ள நிலையில், அதற்கு அமெரிக்கத். தூதரக அதிகாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என வெளியாகும் தகவல்கள் தொடர்பிலேயே விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'உமாௐயா' திட்டத்துக்கு ஈரான் உதவியுள்ளது. ஒரு நாட்டின் அபிவிருத்தித் திட்டத்துக்கு உதவி வழங்கினால் அதன் திறப்பு விழாவில் குறித்த நாட்டின் தலைவருக்கு பங்கேற்க உரிமை உள்ளது. எனவே, நீங்கள் கூறுவதுபோல் அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருந்தால் பயணம் இறுதிநேரத்தில் இரத்து செய்யப்படலாம் - என்று விமல் வீரவன்ஸ குறிப்பிட்டார்.
'இலங்கை வருமாறு அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்கதான் அழைப்பு விடுத்திருந்தார். ஆக எப்படி மறுபடி வரவேண்டாம் எனக் கூறமுடியும்?' என எழுப்பப்பட்ட கேள்விக்கு, "இலங்கையை அரசதலைவர் தான் ஆள்கின்றார் என யார் சொன்னது? சர்வதேச நாணய நிதியமும், அமெரிக்கத் தூதரக மும்தான் ஆள்கின்றன. அவற்றுக்குத் தேவையான முடிவுகளே எடுக்கப்படும். மறைக்கப்பட்ட 9 உண்மைகள் தொடர் பில் நான் புத்தகமொன்றை எழுதி னேன். அதில் நாடு அராஜக நிலைக்குச் செல்வதற்கு அமெரிக்கத் தூதுவரின் ஆலோசனையின் பிரகாரம் சவேந்திர சில்வா, கமால் குணரத்ன, சுரேஷ் சாலே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கினர் எனத் தகவல் வெளியிட்டிருந்தேன்.
முன்னாள் பொலிஸ்மா அதிபருக்குப் பல தடவைகள் சேவைக்கால நீடிப்பு வழங்கப்பட்டது, சவேந்திர சில்வா, சாலே ஆகியோர் இன்னும் பதவிகளில் நீடிக்கின்றனர். இப்படியான நாடுதான் எமது நாடு. அரச விரோத செயல் நடந் துள்ளது என்பது அரசதலைவருக்கும் தெரியும். எனினும், சர்வதேச நாணய நிதியத்திட்டம் வெற்றியளிக்க வேண்டுமெனில் இவர்கள்மீது கைவைக்கமுடியாது” - என்று விமல் வீரவன்ஸ பதிலளித்தார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.