ஆதவன்.
அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே இந்த நாட்டை மீட்க முடியும். அவரின் பயணப்பாதையை மாற்ற முற்பட்டால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம்தான் உருவாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்ததாவது:-
“ஒக்ரோபர் 17ஆம் திகதிக்கு முன்னதாக அரசமைப்பில் உள்ள ஏற்பாட்டுக்க மைய அரசதலைவர் தேர்தல் நடத்தப்படும். மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அதேபோல நிராகரிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. அரசதலைவர் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் பொதுத்தேர்தலின்போது மக்கள் அதனைச் செய்யலாம். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட வேண்டுமென்றால் நிராகரிக்கலாம். ஆனால், அரசதலைவர் தேர்தலை எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் வீழ்ந்த நாட்டை மீட்டெடுத்து வரும் ரணில் விக்கிரமசிங்க அரசதலைவர் தேர்தலில் வெற்றிபெறவேண்டும். உலகில் நாடொன்று வங்குரோத்தடைந்தால் மீண்டுவர 8 முதல் 10 ஆண்டுகள்வரை • செல்லும். எனினும், குறுகிய காலப்பகுதிக்குள் வங்குரோத்து அடைந்த எமது நாட்டை சீரான நிலைக்கு அரசதலைவர் கொண்டுவந்துள்ளார். மே நடுப்பகுதியளவில் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக மீண்ட பின்னர் 7 நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் - என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.