ஆதவன்.
நாட்டின் தற்போதைய முறைமைக்கமைய நிறைவேற்று அதிகார அரசதலைவர் முறைமை அவசியம் என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார். அத்துடன், அரசதலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே தனது ஆதரவு எனவும் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
இந்நாட்டை மீட்கக்கூடிய ஒருவருக்கே அரசதலைவர் தேர்தலில் ஆதரவு வழங்கப்படும். அதனை ரணில் விக்கிரமசிங்க செய்துவருகின்றார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப் படவேண்டும். மக்கள் ஆணையுடன் அவர் பதவிக்கு வர வேண்டும். நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அரசதலைவர் ரணிலுக்கு ஆதரவு வழங்கியமை மகிழ்ச்சியளிக்கின்றது. அடுத்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி பக்கமே நிற்பேன். ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்தால்கூட ஏற்கப்போவதில்லை - என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.