(எழிலன்)
சர்வோதய அமைப்பின் ஸ்தாபகரும் அரசிலமைப்புப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த
காலஞ்சென்ற ஏ.டீ. ஆரியரத்னவின் மறைவு தொடர்பில் சபாநாயகர் அனுதாபம்
இந்நாட்டின் பாரிய மற்றும் பரந்துபட்ட அரச சார்பற்ற நிறுவனமாகக் கருதப்படும் சர்வோதய
சிரமதான அமைப்பின் ஸ்தாபகரும் அரசிலமைப்புப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த கலாநிதி
ஏ.டீ. ஆரியரத்னவின் மறைவு தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன
அவர்கள் அரசியலமைப்புப் பேரவை சார்பில் தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.
2015 - 2018 காலப்பகுதியில் அரசியலமைப்புப் பேரவையின் சிவில் பிரதிநிதிகள் மூவரில் ஒருவராகச்
கடமையாற்றிய அவர் தனது பொறுப்பை மிகவும் பக்கச்சார்பின்றி நிறைவேற்றி தொடர்ச்சியாக சமூக
நீதிக்காக முன்னின்ற தலைவராக சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தனது கருத்தை நேரடியாக வெளிப்படுத்தி ஜனநாயகம் மற்றும் நீதியின் அடிப்படையில் சட்டத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக குரல் எழுப்பியதையும் சபாநாயகர் நினைவு கூர்ந்தார்.
வறுமையை ஒழித்தல் மற்றும் முரண்பாடுகள் அற்ற சமூகமொன்றைக் கட்டியெழுப்புதல் என்பதை
நோக்கமாகக் கொண்ட சர்வோதய சிரமதான அமைப்பின் ஊடாக உண்மையான மனிதாபிமானியாக
ஏ.டீ. ஆரியரத்ன அவர்கள் இலங்கையின் ஆயிரக்கணக்கான குடும்பங்களை பொருளாதார
ரீதியாக உயர்த்துவதற்கு மேற்கொண்ட தோற்கடிக்க முடியாத பணி இந்நாட்டின் வரலாற்றில் என்றும்
அழியாதது என சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.