புதியவன்
உலகளவில் அதிகம் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் டோனி என புகழாரம் சூட்டியுள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அட்ண்டூ ரஸல்.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 22 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டோனி, துடுப்பெடுத்தாட களம் கண்டார். அப்போது சேப்பாக்கத்தில் போட்டியைப் பார்த்து இரசித்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
இரசிகர்களின் ஆரவாரத்தை கேட்டு தனது காதுகளை கைகளால் மூடிக் கொண்டார் ரஸல்.
அந்தளவுக்கு அந்தச் சூழல் இருந்தது. ஒலி அளவை கணக்கிடும் மானியில் 125 டெசிபெல் என பதிவாகியிருந்தது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இது குறித்து ரஸல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.
'இந்த மனிதர் உலகில் மிகவும் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் என்று நான் நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
போட்டி முடிந்த பிறகு டோனியும், ரஸலும் சில நிமிடங்கள் புன்னகையுடன் பேசிக் கொண்டனர். அநேகமாக டோனி களத்துக்கு வந்த போது கிடைத்த வரவேற்பு குறித்து பேசியிருக்க வாய்ப்புள்ளது.
நடப்பு சீசனில் மூன்று முறை டோனி துடுப்பெடுத்தாடினார். விசாகப்பட்டினத்தில் 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்த இரண்டு போட்டிகளில் தலா ஒரு ரன் எடுத்தார். விசாகப்பட்டினத்தில் 128 டெசிபெல் மற்றும் ஹைதராபாத் மைதானத்தில் 122 டெசிபெல் என டோனி துடுப்பெடுத்தாட வந்த போது இரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.