புதியவன்
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அந்த அணி இறுதியாக எதிர்கொண்டு விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் அந்த அணி புள்ளிப் பட்டியலில் 8 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் ஷிகர் தவன் காயம் காரணமாக விலகியதால், அந்த அணியின் தற்காலிக தலைவராக சாம் கரன் நியமிக்கப்பட்டார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதை அடுத்து அந்த அணியின் உரிமையாளரும், நடிகையுமான பிரீத்தி ஜிந்தா பேட்டியளித்தார்.
பேட்டியின் போது பேசிய அவர் பஞ்சாப் அணியில் தற்போது நிலைத்தன்மை மற்றும் சம்பியன் மனநிலை கொண்ட ஒருவர் இல்லாமல் தவிக்கின்றோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரோஹித் சர்மா இடம்பெறும் பட்சத்தில் அவரை அணியில் எடுப்பதற்கு என் வாழ்க்கையைக் கூட பந்தயம் கட்டுவேன். எங்களது அணியில் நிலைத்தன்மை, சம்பியன் மனநிலையைக் கொண்டுவரும் ஒரு அணித் தலைவரை மட்டுமே நாங்கள் இழக்கின்றோம்.' என்று தெரிவித்தார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.