புதியவன்
ஐக்கிய அமெரிக்காவிலும், மேற்கிந்திய தீவுகளிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆடவர் ரி - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தெரிவாளர்கள் பெயரிட்டுள்ள 32 வீரர்களைக் கொண்ட இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தெரிவாளர்கள் ஏற்கனவே அறிவித்தவாறு வனிந்து ஹசரங்க அணித் தலைவராகவும் சரித் அசலங்க உதவித் தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக சர்வதேச ரி - 20 கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி வரும் சகலதுறை ஆட்டக்காரர்கள் உட்பட சிறந்த வீரர்கள் பலர் இக்குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் சில வீரர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இலங்கை குழாத்தில் இணைந்து தீவிர பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை முன்னோடி குழாம் வருமா:
வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலங்க (உதவித் தலைவர்), குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, அஞ்சலோ மத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், குசல் பெரேரா, பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் திக்வெல்ல, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, லஹிரு மதுஷங்க, மதீஷ பத்திரண, நுவன் துஷார, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க, ப்ரமோத் மதுஷான், சாமிக்க கருணாரட்ன, ஜனித் லியனகே, லசித் குரூஸ்புள்ளே, சஹான் ஆராச்சிகே, அகில தனஞ்சய, ஜெவ்றி வெண்டசாய், துனித் வெல்லாலகே, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.