போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆசிரியை உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வியங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபரான ஆசிரியையிடமிருந்து 2 ஆயிரத்து 300 மில்லிகிராம் ஹெரோய்னும் மற்றையவரிடமிருந்து 4 ஆயிரத்து 500 மில்லிகிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.