(புதியவன்)
இந்த நாட்களில் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுவதை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், பெற்றோர்களை இது குறித்து எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
ஊடகங்களுடன் பேசிய லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை (LRH) குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா, "நீண்டகால விடுமுறை நாட்களைத் தொடர்ந்து குழந்தைகள் வெளியில் இருந்து அதிக உணவை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஒரு சாதாரண சூழ்நிலையாகும்."
அறிகுறிகளில் அடிக்கடி தளர்வான அல்லது தண்ணீருடன் மலம் வெளியேறுதல், வயிற்று வலி அல்லது வயிற்றுத் தசைப்பிடிப்புகள், பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும்.
"இந்த அறிகுறிகள் தங்கள் குழந்தைகளில் காணப்பட்டால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்."
மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன உணவளிக்கிறார்கள் என்பதில் அதிக விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில், குழந்தைகள் மத்தியில் டைபாய்டு காய்ச்சல் (Typhoid fever) பரவுவது குறித்தும் மருத்துவர் எச்சரித்தார்.
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு வயிற்றுப்போக்கு நோய் இரண்டாவது முக்கிய காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.