எங்களிட்டதுடக்குப் பாக்கிற மரபொண்டு இருக்கு சிவருக்கு அந்தத்துடக்கு நெடுகப்பாப்பினம். விணைக்கார அமைச்சர் எண்டாலே அவரை துடகுக்காரரா ஒதுக்கி வைக்கிற பழக்கம் யாழ்ப்பாணக் கம்பஸில இப்பவும் இருக்கு. அதுக்கு என்ன காரணம் எண்டு அங்க முந்திப் படிச்சவைக்கு வடிவாத்தெரியும். அதால கம்பஸ்காரர் எண்டாலே அந்த அமைச்சருக்கும் ஆகாது. கீரியும் பாம்பும் மாதிரித்தான் கம்பஸ்காரரும் அமைச்சரும் நடந்துகொள்ளுவினம். கம்பஸ்வாரருக்கு அடிச்சது, துவக்கால வெருட்டினது, கம்பஸ் பெடியன் சிலரைச் சுட்டது எண்ட விசயங்களுக்குப் பின்னால வீணைக்கட்சி இருந்தது எண்டதுதான் கம்பஸ் பெடியளுக்கு கோபம். அதால அவரை கம்பஸுக்கையே கால்வைக்கவிடாமல் பாத்தவை.
ஆனால் இப்ப மெல்ல மெல்ல அந்த நிலைமை மாறிக்கொண்டு போகுது போல கிடக்கு. இடைககிடை யாழ்ப்பாணக் கம்பஸ் பக்கமா அமைச்சரின்ர தலைக் கறுப்புத் தெரிஞ்சது. அதைவிட அவரின்ர சிபாரிசில தான் அங்க கொஞ்சக்காலமா செனட்டுக்கும் ஆக்களை அரசாங்கம் போட்டது. அதோட நிக்காமல் தனக்கு நெருக்கமானவைக்கு வேலையளும் கம்பஸுக்குள்ள எடுத்துக் குடுத்தவராம். எந்தக் கம்பஸ் தனக்கு எதிரா தீயா வேலை செய்ததோ அதே கம்பஸ் தன்ர காலடி யில கிடக்கவேணும் எண்டதுதான் அமைச்சரின்ர கனநாள் கணவு. இப்பிடி அவர் கனவு காண, பழம் நழுவி பல்கலைக்கழகத்தில விழுந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்காம்.
யாழ்ப்பாணக் கம்பஸின்ர பொறியியல் பீடம் கிளிநொச்சியில இருக்கு. அந்தப் பீடத்தை தொடங்கி பத்துவருசம் முடிஞ்சுது, அதைக் கொண்டாடுற நிறைவு விழா நாலைஞ்சு நாளைக்கு முதல் நடந்தது. அந்த நிகழ்வுக்கு வீணைக்கார அமைச்சர்தான் விருந்தினர். தலைக்கறுப்பே தெரியக்கூடாது துடக்குப்பார்த்து வைச்சிருந்தவரை தலைப்பாகை கட்டி கூப்பிட்டிருக் நினம். நிகழ்விலையும் எல்லாரும் அமைச்சருக்கு ஒரே வாழ்த்து மழையாம். இப்பிடி தன்னை விருந்தி னராக் கூப்பிட்டதும். பகழ்ந்து தள்ளினதும் அமைச் சுருக்கு மறக்கேலாத சந்தோசமாம். அவர் இப்பிடியெல் னாம் சந்தோசப்படோணும், அந்தச் சந்தோசத்தை வைச்சு தங்கட அலுவலைப் பாக்கோணும் எண்டது தான் அவரைக் கூப்பிட்டவையின்ற நோக்கம். அமைச் சரைந்தான் விருந்தினராக் கூப்பிடவேணும் எண்டு ஒற்றைக்காலில் நிண்டு அதைச் செய்தும் காட்டியவர் வேற ஆருமில்லை. கிளிநொச்சி பொறியியல்பீடத் துக்கு பொறுப்பா உள்ளவர்தானாம்.
வீணைக்காரர் தான் விருந்தினரா வரப்போறார் எண்டு துணைவேந்தருக்கு அவர் மூச்சும் காட்டா மல், பிரகசியமா வேலைபார்த்திருக்கிறார். நிகழ்வுக் குப் போனபிறகுதான் துணைவேந்தருக்கே இவர் தான் விருந்தினர் எண்ட விசயம் தெரியவந்திருக் குது. ஆனால் அதுக்காகத் திரும்பிவர ஏலாதே.அதால அவர் ஒருமாதிரிப் பல்லைக்கடிச்சுக் கொண்டு நிகழ்வு முடியும் மட்டும் நிண்டுட்டு வந்திட்டார். அதெல்லாம் சரி, இப்பிடி துணைவேந்தருக்கே தெரியாமல் வீணைக்கார அமைச்சரை ஏன் விருந்தினராக் கூப் பிட்டவை? அதுக்கும் காரணம் இருக்கு. பொறியியல் பீடத்துக்கு பொறுப்பா இருக்கிறவர் அடுத்தமுறை துணைவேந்தர் பதவிக்கு போட்டி போடப்போறாராம். அதுதான் இப்பவே அமைச்சரின்ர கடைக்கண் பார்வை தன்னில் விழுந்தால், பதவி கிட்டும் எண்டு கொட்டாவி விடுறார். பாப்பம், அவர் பிடிக்கிற காக்கா பதவியைத் தருமோ, இல்லையோ எண்டு.
(26.03.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.