பிச்சைக்காரரின்ற புண்ணைப் பற்றிக் கேள்விப்பட்ட ருப்பியள். எல்லாருக்கும் காயம் வந்தால் அதை எப்பிடி மாத்தலாம் எண்டுதான் யோசிப்பம். ஆனால், பிச்சைக்காரருக்கு அப்பிடி புண் வந்தால், பெரிய லொத்தர் விழுந்த மாதிரி பளுகப்படுவினம், ஏனெண்டால் அது அவைக்கு முதலீடு. அந்தப் புண்ணைக்காட்டினால், வழக்கமாப் பீச்சை போடாதவைகூட 'ஐயோ பாவம்' எண்டுபோடுவினம். அதால அந்தப் புண்ணை வைச்சு எவ்வளவு காசு வாங்கமுடியுமோ அவ்வளவுக்கு பிச்சைக்காரர் அந்தப்புண்ணை மாறவிடாமல் பாப்பினம்.உந்தப் பிச்சைக்காரப்பண் மாதிரி எங்களில் சிலர் மற்றயைபின்ற அனுதாபத்தைக் தங்கட முதலீடாக்கி வாபம் பாக்கிறவை. லாபம் எண்டால் தனிய காசு மட்டும்தான் லாபம் எண்டு நிணைக்கக்கூடாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசை, அதை நிறைவேற்ற இப்பிர அனுதாப இலையில் நீந்தி விளையாடுவினம். கூடுதலா அரசியல்வாதியன் தான் உந்த விசயத்தில விண்ணர்.
உப்பிடி அனுதாப அலையில் பப்ளிசிட்டிதேட வெளிக் கிறேவை எங்களுக்க கணபேர் இருக்கினம். கிட்டயயில் ஒரு புத்தகவெளியீடுநடந்தது. இயக்கத்தின் சண்டையைப் பற்றி எழுதுப்பட்ட புத்தகம் அது. அந்தப் புத்தகம் எழுதின ஆளையும், அதைப் புத்தகமாக்க முன்னுக்கு நிண்டு வேலை செய்த ஆக்களையும் ரி.ளு.டிக்காரர் விசாரிச்சவை. ஆனால் அந்த விசயம் வெளியால வரேலை. ஏனெண்டால் அவைக்கு உண்மையாகவே பிரச்சினை. பிறகு அதை வெளியில கசியவிட்டால் இன்னும் தங்களுக்குப் பிரச்சிணை எண்டதால அவைதாங்கள் விசாரிக்கப்பட்டதை வெளிப்படுத்தேலை. ஆனால், அந்தப் புத்தக வெளியீட்டு விழாவை ஒழுங்கு செய்த அமைப்பைச் சேர்ந்த ஆக்கள் சிலரை ரி.ஐ.ச.க்காரர் விசாரிச்சது பேப்பர்களிலையும். நெற்றுகளிலையும் வந்தது. இப்பிடி விசாரிக்கப்படுறவைக்கு பிறகும் சிக்கல் வரக்கூடாது எண்டதுக்காக அவையின்ற பேர்,விவரத்தை சில மீடியாக்கள் போடேலை. உடன அந்த விசாரணைக்குப் போன எழுத்தாளர் ஒருத்தருக்கு கடும் கோபம் வந்திட்டாம்.
'என்ர பேரை வெட்டிப்போட்டு நியூஸைப் போட்டிட் டிணம் எண்டு பேஸ்புக்கில ஆள் பெரும் ஒப்பாரி, ஆணால் அதுக்கு கீடி அவருக்கு கருத்துப் போட்ட கணபேர் ஏன் தம்பி. அப்ப பேப்பரில பேர் வரவேணுமெண்டோ விசாரணைக்கு போன்னியன்? எண்டு ரடிகோறித்துப்பின மொமண் டி கேக்கத் துவங்கிட்டினம். அப்பிடி பேர் போட்டால் அவருக்கு என்ன லாபம்? எண்டு நீங்களும் யோரிக்கலாம். பிச்சைக் காரப் புண் மாதிரி 'நானும் ரவுடிதான். என்னையும் விசாரிக்கிறாங்கள்" எண்ட கணக்கில அழுது புலம்பினால் வெளிநாட்டுக்காரர் ஏதும் அனுப்புவினமெல்லோ. அதைவிட கணடாவுக்கோ. லண்டனுக்கோ பறந்துபோய் 'என்னை விசாரிக்கிறாங்கள். கேஸ் போடுறாங்கள்" எண்டு செட்டிலாகலாம். அதைவிட போட்டோவோட செய்தி வந்தால் சனத்திட்ட பேமஸாகலாம்.இப்பிடி நிறைய லாபக்கணக்கு இருக்கு.
அதைவிட பகிடி என்னெண்டால் எனக்கு பேர்பகமுக்கு ஆசை இல்லை' எண்டு சொல்லுற அதே எழுத்தாளர். தன்னை ரி.ஐ.டிக்காரர் விசாரிச்சவை எண்ட செய்தியை தானேஎழுதி. அதுக்கு எண்ண போட்டோ போடோணுமேண்டும் இணைச்சு எல்லா மீடியாவுக்கும் அனுப்பி. போனில செஞ்சிக்கூத்தாடி அதைப் போடவைக்கிறார் எண்டதுதான். தேசியம் எண்டது கணபேருக்கு தெய்வம் மாதிரி. எந்த லாபமுமில்லாமல் ஆராதிப்பினம். இன்னும் சிலருக்கோ தேசியம் எண்டது தேசிக்காயில் செய்யிரு ஊறுகாய் மாதிரி.தங்கட அலுவலுக்கு மட்டும் தேசியத்தை பாவிக்கிறதில வலுவிண்ணர். அப்பிடி விசாரணையனைக்கூட லாபமாக்க ஒரு கூட்டம் வெளிக் கிட்டிருக்கு. கொஞ்சம் விழிப்போடதான் இருக்கோணும் கண்டியளோ.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.