அச்சாணி இல்லாத வண்டில் முச்சாணும் ஓடாது. அதால எல்லாரும் வண்டிலை ஓடவிடாமல் செய்ய எப்பிடியாவது அச்சாணியைப்பிடுங்கி எறியிர வேலையைத்தான் முதலில பாப்பினம். இது தனிய வண்டிலுக்கு மட்டுமில்லை, போராட்டங்களுக்கும் பொருந்தும். பொதுவா ஏதும் போராட்டங்கள் நடந்தால், அதில முன்னுக்கு நிக்கிறவையை தங்கட பக்கம் இழுக்கிறவேலையைத்தான் அதிகாரமுள்ளவை பாப்பினம். அதுக்கும் ஆள் மசியாட்டி வெருட்டிப் பாப்பினம். அதுவும் சரிவராட்டி, எப்பிடியாவது அந்த ஆளை தூக்கிற வேலையைச் செய்வினம், தூக்கிறது எண்டதின்ர அர்த்தம் கொலை செய்யிறது மட்டுமில்லை. பதவியில இருந்து அகற்றுறது. இடத்தை மாத்துறதும் வரும். அப்பிடி ஒரு போராட்டத்தில முன்னுக்கு நிண்ட ஒருத்தர் அந்த இடத்தில இருந்து தூக்கப்பட்டிருக்கிறார்.
கிளிநொச்சி, பூநகரி - கிராஞ்சியில சிமெந்துக் கொம்பனி போடுறதுக்கு அங்கத்தைச் சனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிச்சு போராடி வருகினம். இந்த சிமெந்துக் கொம்பனிக்கு, பொன்னாவெளியில இருந்துதான் சுண்ணக்கல் அகழப்போயினம். அப்பிடி அகழ்ந்தால் உவர்நீர் கூடி, அங்க நல்லதண்ணியே இல்லாமல் போடும். விவசாயமும் செய்யமுடியாமல் தரை சவராப் போடும். இதைத் தடுக்கிறதுக்காகப் போராடுற சனத்துக்கு முன்னுக்கு நிண்டு தோள் குடுத்தவர் பூநகரி வலைப்பாட்டில கத்தோலிக்க பங்குத்தந்தையா இருக்கிறவர்தான். அவர் இருக்கும் வரைக்கும் சனம் போராடிக்கொண்டிருக்கும் எண்டு அதிகாரமுள்ளவைக்கு விளங்கிட்டுது. அவரை விலைக்கு வாங்கவும் முடியாது, வெருட்டவும் முடியாது. அதால அவரை அந்த இடத்தில இருந்து தூக்கோணும் எண்டு முடிவெடுத்திருக் கினம். வடக்கில உள்ள அமைச்சர் தான் அவரை அகற்றவேணும் எண்டதில மும்முரமா நிண்டவர். இது அந்தப் பங்குத் தந்தைக்கும் நல்லாத் தெரியும். அதால இந்த விசயத்தை அவர் பகிரங்கமா செய்தியாளர் சந்திப்பிலையும் சொன்னவர். இப்ப அவர் சொன்னது உண்மையாபோட்டுது. போனகிழமை நடந்த பாலைதீவு அந்தோனியார் திருவிழாவோட அவர் தன்ர பதவியில வெளியேறிட்டார் எண்டு கதை அடிபடுகுது.
இதுக்கு என்னெண்டு ஆயர் இல்லம் விட்டது? எண்டும் சனத்திட்ட கேள்வி இருக்கு. ஆனால், தீவகத்தில இப்பிடிச் சனத்துக்காகப் போராடின ஜிம் பிறவுண் அடிகளுக்கு என்ன கதி நடந்ததெண்டு எல்லாருக்கும் வடிவாத் தெரியும். அப்பிடி இந்தப் பங்குத்தந்தைக்கும் நடந்திடக்கூடாது எண்டதுக் காகத்தான் இப்பிடி அவரை அந்த இடத்தின்ர பங்குத் தந்தை எண்ட பதவியைத் தூக்க யாழ்ப்பாண ஆயர் இல்லமும் ஓமெண்டு சொல்லியிருக்கலாம் எண்டும் சொல்லுப்படுகுது. எப்பிடியோ பொன்னாவெளிச் சனத்துக்கு அந்தப் பங்குத்தந்தை அங்கை இருந்து போனது பெரிய இழப்புத்தான். அந்தப் பங்குத்தந்தை தான் அவைக்கு முழு சப்போர்ட்டா முன்னுக்கு நிண்டவர். இப்ப அந்த மலையையே அசைச்சதால, பொன்னாவெளிச்சனங்கள் என்ன செய்யிற தெண்டு தெரியாமல் அந்தரிக்கினமாம். நல்லதுக்கு காலமில்லை கண்டியளோ.
(19.03.2024- உதயன் பத்திரிகை)
rw2vth
wvgxwv
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.