நெருப்பில்லாமல் புகையாது. அதுமாதிரி காரணமில்லாமலும் நெருப்பு எரியாது. ஆனால் கிட்டடியில கல்லுண்டாய்வெளிக்குள்ள மூண்டு நாளாப் பத்தியெரிஞ்ச நெருப்புக்கு என்ன காரண மெண்டு இன்னும் ஒருத்தரும் கண்டுபிடிக்கேலையாம். யாழ்ப்பாணத்தில உள்ள குப்பை கூழத்தையெல்லாம் அங்கதானே கொட்டியிருக்கினம். அதால குப்பைக்குள்ள நெருப்பெரிஞ்சதைப் பற்றி ஒருத்தரும் பெரிசாக் கணக்கெடுக்கேலை. குப்பைக்குள்ள குண்டுமணி மட்டுமில்லை மாபி யாக்களும், மருந்துக்கழிவுகளும் கூட ஒளிஞ் சிருக்கலாம். இந்தக் கல்லுண்டாய் குப்பையில எரிஞ்ச நெருப்பு தானாவே மூளுறதுக்கு சான்ஸ் இல்லை. குடிமனையில இருந்துகனதூரத்தில தான் எரிஞ்ச குப்பைக்குவியல் இருந்தது. அப்ப அந்த வீடுகளில் இருந்து குப்பையில நெருப்புப் பிடிச்சிருக்காது. ஆரும் கிட்டப்போய்த்தான் நெருப்பை வைச்சிருக்கோணும்.
அப்ப என்னதான் நடந்திருக்குமெண்டு விசாரிக்கேக்க சில தகவல்கள் வெளியில கசிஞ்சது. எரிஞ்ச குப்பைக்குள்ள ஒரு ஆஸ்பத்திரியின்ர மருத்துவக் கழிவுகளும் இருந்திருக்கு. உண்மையில அங்க மருத்துவக் கழிவுகளை கொட்டுறதுக்கு அனுமதி இல்லை. ஆனால் அதை களவா அகற்றுறதுக்கு கிட்டத்தட்ட ஆறு இலட்சம் கைநீட்டி வாங்குப்பட்டதெண்டும் தகவல். இது மேலிடத்துக்கு தெரியாது. அதோட இந்தக் குப்பையளோட பொலித்தீன்களும் சேர்ந்து இருந்திருக்கு. பொலித்தீனை குப்பையோட வைச்சிருக்காமல் புறிம்பாக்கி போடச்சொல்லி புதுசா வந்த ஆணையாளர் உடும்புப்பிடியா இருந்திருக்கிறார். குப்பையையும் பொலித்தீனையும் பிரிக்கிறதெண்டால் அதுலேசுப்பட்ட வேலையில்லைத்தானே. அண்டைக்கு இரவு அந்தக் குப்பை போடுற இடத்தில ஒரு தண்ணிப்பார்ட்டி நடந்திருக்கு. அந்தப் பார்ட்டி முடியவும் குப்பை பத்தி எரியவும் சரியா இருந்ததெண்டு அக்கம் பக்கத்தில உள்ளவை சொல்லுகினம்.
இந்தக் குப்பை எரிஞ்ச தகவல் கிடைச்சும் முனிசிபல்காரர் அதை நூக்கிறதுக்கு உடன நடவடிக்கை எடுக்கேலையாம். நெருப்பெரியத் தொடங்கினவுடன. முனிசிபலுக்கு தகவல் கிடைச்ச ரண்டு, மூண்டு மணித்தியாலயத்துக்குப் பிறகுதான் தீயணைப்புப்படை அனுப்புப்பட்டிருக்கு. ஆனால் அதுக்குள்ள நெருப்பு முளாசி எரியத் தொடங்கினதால இப்போதைக்கு அதை நூக்க முடியாதெண்டு அவை இரவே திரும்பி வந்திட்டினம். பிறகு அடுத்த நாள் விடிய. குப்பையள் எல்லாம் எரிஞ்ச பிறகுதான் அவை போய் நெருப்புக்கு தண்ணியடிச்சு நூத்தவையாம். அதுக்குப்பிறகு 2நாள் குப்பைமேடு புகைஞ்சபடியே இருந்திருக்கு. இந்த நெருப்பில குப்பையோட குப்பையா மண்வெட்டி, சவள் எண்டு நிறையச் சாமான்களும் எரிஞ்சதெண்டும், அதால கடும் இழப்பெண்டும் உள்ளுக்கால ஒரு தகவல், உந்தக் குப்பையக்கிளற வெளிக்கிட்டால் இன்னும் நாறும், இதோட நிப்பாட்டுவம்.....
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.