புதியவன்
ஐ.பி.எல். ரி - 20 கிரிக்கெட் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுக்களை இழந்த பஞ்சாப் கிங்ஸ் 147 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பஞ்சாப் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் வருவதும் போவதுமாக இன்றைய இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
முலான்பூரிலுள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சைத் தெரிவு செய்தது. அந்த அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ - அதர்வ தைடே களமிறங்கினர்.
27 ஓட்டங்களைச் சேர்த்த இந்த ஜோடியை 4 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் அவேஷ் கான் பிரித்தார். அதர்வ தைடே 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 10 ஓட்டங்களில் கிளம்பினார். ஜானி பேர்ஸ்டோ 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, சாம் கரன் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். 10 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 4 விக்கெட்டை இழந்த பஞ்சாப் 53 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது.
ஷசாங்க் சிங் 9 ஓட்டங்கள், ஜிதேஷ் சர்மா 29 ஓட்டங்கள் என நிலைக்காமல் கிளம்ப அஷுதோஷ் சர்மா மட்டும் அணியில் அதிகபட்ச எண்ணிக்கையான 31 ஓட்டங்களைச் சேர்த்தார். அவரின் 3 ஆறு ஓட்டங்கள் பெரும் நம்பிக்கையூட்டியது. இறுதியில் அவரும் ஆட்டமிழக்க 8 விக்கெட்டுக்களை இழந்த பஞ்சாப் 147 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது.
ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், டிரெண்ட் போல்ட், சாஹல், குல்தீப் சென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.