பள்ளிக்கூடங்கள் எண்டாலே பிரச்சினையளுக்குப் பஞ்சமில்லைப்போல. முந்தியெண்டா பள்ளிக் கூடத்துக்க ஏதும் நடந்தால் அதை உள்ளுக்கையே வைச்சு சமாஎளிச்சுப்போடுவினம். கூடுதலா பிள்ளையளுக்கு அடிச்ச பிரச்சினைதான்வரும். அப்பிடி ஆரும் பிள்ளைக்கு அடிபட்டால், அந்தப் பிள்ளையைக் கூப்பிட்டு 'வீட்டை அடிச்சவை எண்டு சொல்லக்கூடாது. அப்பிடியும் அவை கால்நொண்டேக்க. இல்லாட்டி காயத்தை கண் டிட்டு என்ன நடந்தது எண்டு கேட்டால் விளையாடேக்க விழுந்துபோனன் எண்டுதான் சொல்லோணும் எண்டு ஒரு மார்க்கமா வெருட்டித்தான் அனுப்புவினம். பிள்ளை யளும் பயத்தில வீட்டை சொல்லுறேலை. அதையும் மீறி பெற்றாருக்குத் தெரியவந்தால், அவையைக் கூப்பிட்டு உங்கடபிள்ளை படிக்கிற பள்ளிக்கூட மானத்தை கப்ப லேத்தினால் உங்கட பிள்ளைக்கும்தானே மரியாதை இல்லை' எண்டெல்லாம் மண்டையைக் கழுவி, அவை யின்ர வாயை அடைச்சுப் போடுவினம். அதோட அந்த விசயம் கிணத்துக்குப் போட்ட கல்லுமாதிரி அப்பிடியே தாண்டுபோடும். சில பெற்றோர் இதுகளுக்கெல்லாம் மசி யாமல் சட்டநடவடிக்கை எடுக்கப்போறம் எண்டு வெளிக்கிட்டால், 'என்ன ஆதாரம் இருக்கு?' எண்டு கேப் பினம். பள்ளிக்கூடத்தில பிள்ளையை ரீச்சர் அடிச்சதுக்கு எப்பிடி ஆதாரம் திரட்ட ஏலும்? அடிகாயத்தை மட்டும் வைச்சுக்கொண்டு அது ரீச்சர் அடிச்சுத்தான் வந்தது எண்டு எண்பிக்கேலாதே. அதால பள்ளிக்கூடக்காரரோட சண்டையைப் பிடிச்சுக்கொண்டு, தங்கட பிள்ளையை வேற பள்ளிக்கூடத்துக்கு மாத்துறதுதான் பெற்றார் செய்யிற ஆகப்பெரிய நடவடிக்கை.
ஆனால் இப்ப அப்பிடியெல்லாம் ஆதாரமில்லை எண்டு பள்ளிக்கூடக்காரர் மழுப்ப ஏலாது. எல்லாரின்ர கையிலையும் போன் இருக்கு. எல்லாரும் எப்பவும் வீடியோ எடுக்கலாம். போட்டோ எடுக்கலாம். கதைக் கிறதை ரெக்கோர்ட் பண்ணலாம். அதுதான் இப்ப ரீச்சர்மா ருக்குப் பெரும் தலையிடி. இப்பவெல்லாம் அடிக்கடி பள்ளிக்கூடங்களில் பிள்ளையளுக்கு ரீச்சர்மார் அடிச்ச செய்தியள் வாறதுக்கு காரணமும் உந்தப் போன்தான். பாதிக்கப்பட்ட பிள்ளையளின்ர பெற்றோர், அந்தப் பிள்ளைக்கு அடிச்ச ரீச்சரோடையோ இல்லாட்டி பிரின்சிப்பலோடையோ போன்ல கதைச்சு,அதை ஆதாரமா ரெக்கோர்ட் பண்ணிட்டு, பிறகு அதை எங்க குடுக்க வேணுமோ அங்க குடுத்து பிரச்சினையை வெளியில கொண்டந்திருகினம். இதால அடிச்சதை இல்லையெண்டு சொல்லவும் ஏலாமல், அடிச்ச ரீச்சரில அக்ஷனும் எடுக்க ஏலாமல் பள்ளிக்கூடக்காரர் தடுமாறுகினமாம். இதைத் தடுக்கிறதுக்கு இப்ப ஒரு வழியைக் கண்டுபிடிச்சு, அதை எல்லா ரீச்சர்மாருக்கும் அறிக்கையாகவும் அனுப்பியிருக்கு ஆசிரியர் சங்கம்.
'இனிமேல் ரீச்சர்மார் பெற்றாரோடையோ, தேவையில்லாத ஆக்களோடையோ, போனில கண்டபடி கதைக்கவேண்டாம். ஏலுமட்டும் அப்பிடியான கோலை கதைக்காமல் விடுறது இன்னும் நல்லது' எண்டமாதிரி ஒரு அட்வைஸ் அறிக்கை எல்லா ரீச்சர்மாருக்கும் அனுப்பப்பட்டிருக்கு. சீப்பை ஒளிச்சு வைச்சால் கலியா ணத்தை நிப்பாட்ட ஏலுமோ? இப்பிடி கோல் கதைக்கிறதை நிப்பாட்டுறதைவிட, பிள்ளைக்கு அடிக்காமல் இருங்கோ எண்டுதானே அந்தச் சங்கம் சொல்லியிருக்கோணும். குற்றத்தை தடுக்கிறதை விட்டிட்டு, குற்றம் செய்துபோட்டு எப்பிடித் தப்பலாம் எண்டு ஐடியா குடுக்கிறதுக்குதான் உந்தச் சங்கங்கள் இருக்கோ?
(08.04.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.