முந்தி ஒவ்வொரு ஊரிலையும் மைனர்க் குஞ்சுகள் இருக்கிறவை. ஊரையே தாங்கள் தான் குத்தகைக்கு எடுத்தமாதிரித்தான் அவையின்ர போக்கும் நடப்பும் இருக்கும். எல்லாப் பிரச்சினையளுக்கையும் வேட்டியை மடிச்சுக் கட்டிக்கொண்டு, வலியப் போய் தலையை இட்டி, எல்லாத்தையும் குழப்பியடிச்சு அதில ஏதும் ஆதாயம் தேடுறதும், தேடுவாரில்லாமல் கிடக்கிற சொத்துகளை ஆட்டையைப் போட்டு தங்கட சொத்தா மாத்துறதும் தான் அவையின்ர தொழில். இஞ்சையும் ஒரு மைனர் அமைச்சர் இருக்கிறார். கட்சியின்ர பேர்ல மட்டும் ஜனநாயகம் இருந்தாலும், 'நாங்கள் ஜனநாயக நீரோட்டத்துக்க நீந்திறம் தியேட்டர் கரண்ட் பில்லில சுழி ஓடுறம்' எண்டெல்லாம் கதைவிட்டாலும், அவருக்கு சண்டித்தனத்தில தான் நம்பிக்கை கூட கொரோனாக்கு பிறகு வடமராட்சியில மீனவர் போராட்டத்துக்குப் போய் வேட்டியைத் தூக்கிக்கட்டிக்கொண்டு சண்டித்தனம் காட்ட வெளிக் கிடேக்க, பதிலுக்கு மீனவரும் முறுக. கடைசியில அவரின்ர பாதுகாப்புக்கு நிக்கிறவைதான் அவரைப் பத்திரமா அங்கையிருந்து கொண்டந்தவை.
அதுக்குப் பிறகாவது. தன்ர வயசை நினைச்சு கொஞ்சம் ஆத்திரத்தை அடக்கி வைச்சிருக்க ஆள் பழகியிருக்கோணும். ஆனால் துவக்கைத் தூக்கி தன்ர சனத்தையே போட்டுத்தள்ளின கை துடிச்சுக் கொண்டுதான் இருக்கும் போல. அதுக்குப் பிறகும் வேற சில இடங்களில ஆள் உந்தச் சண்டிக்கட்டு வெருட்டலை விடேலை. எல்லா இடத்திலையும். சண்டிக்கட்டுச் சண்டித்தனம் வேகாது தானே. அதி லையும் வெயிலுக்க வெந்துகொண்டு, சுண்ணாம்புக்கல் அகழக்கூடாது எண்டு போராடின சனத்திட்ட எப்பிடி உந்தச் சண்டித்தனம் எடுபடும்? உப்பிடி சுண்ணக்கல்லை வெட்டி எடுத்து சிமெந்து பக்டரிக்கு குடுத்தால், ஊருக்குள்ள கடல்தண்ணி பூந்து, எல்லாத்தையும் நாசமாக்கிப்போடும் எண்டது தான் சனத்தின்ர பிரச்சினை. ஒரு பக்டரியைக் கட்டுறதெண்டால். சனத்துக்கு சிக்கல் வராமல் கட்டவேணும். சனத்தையும், ஊரையும் அழிச்சுப்போட்டு, ஊரையும் நிலத்தையும் தங்கட கொமிசனுக்காக வந்தான் வரத்தானுக்கெல்லாம் குடுத்தால் சனம் எதிர்க்கத்தான் செய்யும்.
பூநகரியில திறக்க இருக்கிற சிமெந்து பக்டரிக்கும் உள்ளால காசு மாறியிருக்காம். 'எல்லாம் நான் வெண்டுதருவன்' எண்டு சண்டித்தன அமைச்சர் சொன்னதைக் கேட்டு, கொம்பனிக்காரரும் 'பெரிசா'' கவனிச்சிருக்கினம் போல. அந்த விசுவாசத்துக்காக சனத்தை அடிச்சு மிதிச்சுப் போட்டு, பக்டரியை திறக்க வெளிக்கிட்டா என்ன நடக்கும் எண்டதை சனம் வடிவாக் காட்டிப்போட்டுது. அண்டைக்கும் சனம் எதிர்க்க ஆள் அவையை வெருட்டுறதுக்காக சண்டிக்கட்டை கட்டிக்கொண்டு சனம் நிக்கிற பக்கமா போயிருக்கிறார். உடன போராடின பொம்பிளையளில ஒராள் மைக்கை வாங்கி மீன்குஞ்சு காட்டி ஏமாற்றிய அமைச்சரே. இங்கே எதைக்காட்டி ஏமாற்ற வருகிறாய்? எண்டு கேட்டதும் தான் தாமதம், உடனேயே ஆள் சண்டிக்கட்டை அவிட்டு கால்மட்டும் மறைச்சவராம். அதுக்குப் பிறகுதான் சனத்தோட பிடுங்குப்பட்டு ஹெல்மெட்டும் இல்லாமல் மோட்டார் சைக்கிளில தப்பினம் பிழைச்சம் எண்டு அமைச்சர் ஓடியிருக்கிறார். சண்டிக்கட்டுக்காலமெல்லாம் மலையேறிட்டுது எண்டது இனியாவது மீன்குஞ்சு அமைச்சருக்கு விளங்கினால் சரி.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.